வணக்கம் நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை (2011) வரவேற்க ஆவலாக உள்ளோம் இந்த தருணத்தில் நமது வலைப்பூ மூலம் உங்கள் அனைவருக்கும் வலையுலகில் என்னோடு சேர்ந்து பயணிக்கும் சக பதிவர் நண்பர்களுக்கும் இதுவரை நமது தளத்தில் 128 பாலோவர்ஸாக சேர்ந்து என்னை பெருமைபடுத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் பதிவுகளை மின்னஞ்சலில் வாசிக்கும் நண்பர்களுக்கும் மற்றும் பதிவுகலக வாசகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Friday, December 31, 2010
Tuesday, December 28, 2010
கனவும் படிப்பும் காதலும்....!
கனவும் படிப்பும் காதலும்
Monday, December 27, 2010
அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்)
வணக்கம் நண்பர்களே,
இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகும் வரலாற்று மாந்தர் தாம் வாழ்ந்தவரை அன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர். இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.
இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகும் வரலாற்று மாந்தர் தாம் வாழ்ந்தவரை அன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர். இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.
Wednesday, December 22, 2010
காலண்டர் பிறந்த கதை...
வணக்கம் நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை (2011) வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!
பாடங்கள்:
கால்ண்டர்,
பொது அறிவு
Monday, December 20, 2010
கணினியும் கணினி சார்ந்தவையும்-1
அன்பின் நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்,
பதிவுலகம் சம்பந்தமான ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், சமீப காலமாக பதிவுகள் எழுதாமல் இருந்த மதிப்பிற்குரிய திரு.பிகேபி ஐயா அவர்கள் மீண்டும் பதிவு எழுத ஆரம்பித்திருக்கிறார் அவரின் வருகை மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.
பாடங்கள்:
கணினி,
பொது அறிவு
Wednesday, December 15, 2010
எண்ணில் பிறந்த சொற்கள்
நம்மில் பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான் எண்களைக் கண்டாலே சற்று பயம். ஆனால் எண்களை நாம் விட்டு விட முடியாது அவை நமது வாழ்க்கையில் நம்மோடு ஒன்றினைந்து விட்டன. எண்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை வரவு-செலவு பார்க்கவும், எண்ணிச் சொல்லவும் சிலப் பொருட்களைக் குறிப்பிடவும் எண்கள் தேவையாகத்தான் இருக்கின்றன வேறு சிலருக்கோ எண்களோடு விளையாடுவதில் அலாதி இன்பம் எண்கள் அவர்களின் இணை பிரியாத் தோழர்கள்.
பாடங்கள்:
ஆங்கில சொற்கள்,
எண்கள்,
சொற்கள்,
பொது அறிவு
Monday, December 13, 2010
மகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்!
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா!
நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!
நெருங்கின பொருள் கைபட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்!
வட்ட கரிய விழியில் கண்ணம்மா
வானக் கருனைக் கொள்!
இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். 'வரகவி' என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி. அவர்தான் 'மீசை கவிஞன்' என்றும் 'முண்டாசு கவிஞன்' என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.
Friday, December 10, 2010
கணினிக் காதலன்-கணினிக் கவிதை
கண்ணாடி குடுவைக்குள்
அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
கையலக கணினியின்
கட்டுக்குள் அடக்கிய
மாபெரும் மகானுக்கு
அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
கையலக கணினியின்
கட்டுக்குள் அடக்கிய
மாபெரும் மகானுக்கு
என் முதல் நன்றி!
Wednesday, December 8, 2010
பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேசுக்கு - இந்தப் பாடல் அர்ப்பணிப்பு
வணக்கம் நண்பர்களே இந்த பாடல் நம்ம பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன், இப்ப சமீபகாலத்துல சிரிப்புபோலீஸ் அண்ணன் டாக்டர். கேப்டன் ரசிகர்மன்றத் தலைவராக பொறுப்பெடுத்துக் கொண்டு கேப்டனின் புகழை பரப்பவதோடு மட்டுமல்லாமல் விருதகிரி படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாட வேண்டும் என்று தனது குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, காசுகொடுத்து ஆட்கள் சேர்த்துகொண்டிருக்கிறார் விருதகிரி படம் பார்ப்பதற்கு.
Monday, December 6, 2010
கல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்!
நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.
Thursday, December 2, 2010
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........
பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் !
அது பொம்பளைக்கும் தெரியும்!
அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் !
அது யாருக்குத்தான் தெரியும்....!
அது பொம்பளைக்கும் தெரியும்!
அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் !
அது யாருக்குத்தான் தெரியும்....!
Sunday, November 28, 2010
Wednesday, November 24, 2010
பில் கேட்ஸ் - வரலாற்று நாயகர்!
இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்?
கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வுளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான்... ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...
Tuesday, November 16, 2010
ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டுமே முடியும்
இன்றைய சிந்தனை: ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
பாடங்கள்:
கவிதை
Friday, November 12, 2010
கணினி கலைச் சொற்கள்
பாடங்கள்:
கணினி,
கலைச் சொற்கள்
Thursday, November 4, 2010
இனிய தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய
தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Monday, October 25, 2010
தமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
இந்த பதிவு நண்பர் சசிகுமாரின் வந்தேமாதரம் தளத்திலிருந்து....
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பிடம் : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்க்கவும் முடியாத கருணை செயல்.
பாடங்கள்:
மனிதருள் தெய்வம்
Saturday, October 23, 2010
படித்ததில் ’ரசித்த’ வரிகள்
என்ன செய்கிறாய் இப்போது
இனிமேல் நானும் கேட்கலாம்
ஏனென்றால் எனக்கும் வேலை
கிடைத்துவிட்டது...
இனிமேல் நானும் கேட்கலாம்
ஏனென்றால் எனக்கும் வேலை
கிடைத்துவிட்டது...
Wednesday, October 20, 2010
Wednesday, July 14, 2010
Friday, July 9, 2010
கணினியும் கவிதையும்
கணினி
கண்ணாடி குடுவைக்குள்
அடைப்பட்ட ஆக்சிஜனாய்-இவ்வுலகை
கையலக கணினியின்
கட்டுக்குள் அடக்கிய
மாபெரும் மகானுக்கு
என் முதல் நன்றி!
பாடங்கள்:
கவிதை
Subscribe to:
Posts (Atom)