Wednesday, January 5, 2011

செம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே......!

சிந்தனைக்கு: பாட்டும் இசையும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பயன் தருமாம்.

வணக்கம் நண்பர்களே, இன்று எனக்கு மிகவும் பிடித்தப் பாடலை ஒன்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன் இந்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன், சில நண்பர்கள் இந்த பாடலை முன்னமே கேட்டிருக்கலாம். இந்த பாடலின் படம் என்ன காரணத்தினாலோ வெளியாகவில்லை.


படம் ட்ராப் ஆகிவிட்டது என்றே நினைக்கிறேன் ஆனால பாடல் மிகவும் அருமை பாடலாசிரியர் பா.விஜய் அவர்களின் வரிகளுக்கு பாடகர் ஹரிஹரன் உயிர்கொடுத்திருக்கிறார் S.A. ராஜ்குமாரின் இசையில் (படம்: காதல் சொல்ல வந்தேன்) இந்த பாடலை தினமும் ஒருமுறையாவது கேட்டுவிடுவேன். காதலை மென்மையாக சொல்லும்  கவித்துமான வரிகளுக்காகவே. இசையும் வரிகளுக்கேற்றார்போன்று பயணித்து நம்மை ஆட்கொள்கிறது அதுவும் நம்ம Pioneer சவுண்ட் சிஸ்டத்துல ஸ்டீரியோ ஃஎபெக்ட்ல பாட்ட கேட்பதற்கு அப்படித்தான் இருக்கு. கண்டிப்பா நீங்களும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.

Film : Kaadhal solla vandhen
Singer : Hariharan
Music : S.A.Rajkumar
Lyrics : Pa.Vijay
Song : sembaruthi poove

Year: 1999

செம்பருத்தி  பூவே  செம்பருத்தி  பூவே 
உள்ளம்  அள்ளி  போனாய்  நினைவில்லையா 
கண்கள்  அறியாமல்  கனவுக்குள்  வந்தாய் 
மனசுக்குள்  நுழைந்தாய்  நினைவில்லையா 


உன்னை  சுற்றி  சுற்றி  வந்தேன்  நினைவில்லையா 
என்னை  சுத்தமாக  மறந்தேன்  நினைவில்லையா 
அதை  சொல்லத்தான்  நினைக்கின்றேன் 
நான்  சொல்லாமல்  தவிக்கின்றேன் 


செம்பருத்தி  பூவே  செம்பருத்தி  பூவே 
உள்ளம்  அள்ளி  போனாய்  நினைவில்லையா 
கண்கள்  அறியாமல்  கனவுக்குள்  வந்தாய் 
மனசுக்குள்  நுழைந்தாய்  நினைவில்லையா

பூ என்ன  சொல்லுமென்று  காற்றறியும் 
காற்றென்ன  சொல்லுமென்று  பூவறியும் 
நான்  என்ன  சொல்ல  வந்தேன் 
நெஞ்சில்  என்ன  அள்ளி  வந்தேன் 
ஒரு  நெஞ்சம்  தான்  அறியும் 
வானவில்  என்ன  சொல்ல  வந்ததென்று 
மேகமே  உனக்கென்ன  தெரியாதா 
அல்லி  பூ  மலர்ந்தது 
ஏனென்று  வெண்ணிலவே 
உனக்கென்ன  தெரியாதா 
ஓ.....
வலியா  சுகமா  தெரியவில்லை 
சிறகா  சிறையா  புரியவில்லை 
அதை  சொல்லத்தான்  நினைக்கின்றேன் 
நான்  சொல்லாமல்  தவிக்கின்றேன்..... 


செம்பருத்தி  பூவே  செம்பருத்தி  பூவே 
உள்ளம்  அள்ளி  போனாய்  நினைவில்லையா 
கண்கள்  அறியாமல்  கனவுக்குள்  வந்தாய் 
மனசுக்குள்  நுழைந்தாய்  நினைவில்லையா 


ஜன்னலில்  தெரியும்  நிலவுடனே 
சண்டை  போட்டது  நினைவில்லையா 
மரம்  செடி  கொடியிடம் 
மனசுக்குள்  இருப்பதை
சொல்லியது  நினைவில்லையா 
எண்பது  பக்கம்  உள்ள  புத்தகம்  எங்கும் 
கவிதை  எழுதிய   நினைவில்லையா 
எழுதும்  கவிதையை  எவர்  கண்ணும் 
காணும்  முன்பு  கிழித்தது  நினைவில்லையா 
ஓ....
இரவில்  இரவில்  கனவில்லையா 
கனவும்  கனவாய்  நினைவில்லையா 
அதை  சொல்லத்தான்  நினைக்கின்றேன் 
நான்  சொல்லாமல்  தவிக்கின்றேன்
 
செம்பருத்தி  பூவே  செம்பருத்தி  பூவே 
உள்ளம்  அள்ளி  போனாய்  நினைவில்லையா 
கண்கள்  அறியாமல்  கனவுக்குள்  வந்தாய் 
மனசுக்குள்  நுழைந்தாய்  நினைவில்லையா


உன்னை  சுற்றி  சுற்றி  வந்தேன்  நினைவில்லையா 
என்னை  சுத்தமாக  மறந்தேன்  நினைவில்லையா 
அதை  சொல்லத்தான்  நினைக்கின்றேன் 
நான்  சொல்லாமல்  தவிக்கின்றேன்......!

பாடலை கேட்க:

டிஸ்கி: என்ன நண்பர்களே பாடலை கேட்டு ரசித்தீர்களா இதுபோன்ற நல்ல பாடலையும் இசையையும் தேடி கேளுங்கள் உங்கள் மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

93 comments:

  1. நல்ல பாடல்; கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. நல்ல ரசனை..

    நானும் இந்த பாடலைக் கேட்டிருக்கிறேன்.. :)

    ReplyDelete
  3. இசை தேவா அல்ல மாணவரே, எஸ்.ஏ. ராஜ்குமார்.

    ReplyDelete
  4. டிஸ்கி: என்ன நண்பர்களே பாடலை கேட்டு ரசித்தீர்களா//

    ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவ? இல்லைன்னு சொன்னா என்ன பண்ணுவ?

    ReplyDelete
  5. //அல்லி பூ மலர்ந்தது
    ஏனென்று வெண்ணிலவே
    உனக்கென்ன தெரியாதா//

    //வலியா சுகமா தெரியவில்லை
    சிறகா சிறையா புரியவில்லை //
    ////எழுதும் கவிதையை எவர் கண்ணும்
    காணும் முன்பு கிழித்தது நினைவில்லையா //
    nice lines.

    ReplyDelete
  6. புதுப்பாடல்கள் எனக்கு அவ்வளவு தெரியாது ராசா.

    ReplyDelete
  7. இப்படிக் கூட பதிவு போடலாமா?
    பலே.. பலே..

    ReplyDelete
  8. வலியா சுகமா தெரியவில்லை
    சிறகா சிறையா புரியவில்லை//
    ஆஹா காதல் உணர்வை அழகா சொன்ன பாட்டு

    ReplyDelete
  9. டைப் செய்து வெளியிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  10. புதுப்பாடல்கள் எனக்கு அவ்வளவு தெரியாது ராசா//
    இவருக்கு 80 வயசு இருக்குமோ

    ReplyDelete
  11. கேட்டிருக்கேங்க.. நல்ல பாடல்..

    ReplyDelete
  12. இப்பத்தான் நினைத்தேன் எங்க பதிவை காணமே என்று

    ReplyDelete
  13. 'செம்பருத்தி பூவே.. ' ன்னுதும் நெனெச்சேன்.. எனக்கும் ரொம்ப பிடிக்கும் அந்த பாடல்.. ஏன் எல்லாருக்கும் பிடிக்கும்..! அப்படியே இங்கேயும் வந்துட்டு போலாமே.. மாணவன்...www.thangampalani.blogspot.com

    ReplyDelete
  14. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.. அடிக்கடி கேட்பேன்.. நண்பர்கள்லாம்.. நல்லா ஓட்டுவாங்க.. எப்படித்தான் இப்படி யாருக்கும் தெரியாத பாட்டா விரும்பி கேக்கிறியோன்னு.. ஆனாலும் நான் விரும்பி கேட்பேன்.. சுமாரான இசைன்னாலும்.. அந்த வரிகளுக்காகவும்.. அதை அவரு பாடிருக்கற விதத்துக்காகவுமே எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்..

    ReplyDelete
  15. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    ithu music SA Rajkumar///////////////

    ஆமா கண்டுபிடுச்சிட்டாறு கவர்னரு!

    ReplyDelete
  16. அருமை மாணவன் என்றுமே உயிர்ப்புடன் வாழும் இசையை உடைய பாடல்...

    ReplyDelete
  17. பாரத்... பாரதி... said...
    இசை தேவா அல்ல மாணவரே, எஸ்.ஏ. ராஜ்குமார்.////////////


    மக்கா...உங்க பிளாக்ல என்ன பிரச்சனை? ஓபன் பண்ண முடியல!

    ReplyDelete
  18. //புதுப்பாடல்கள் எனக்கு அவ்வளவு தெரியாது ராசா. ///

    புதுப்பாட்டு.. இந்த பாட்டு வெளி வந்து 10, 12 வருசத்துக்கு மேல இருக்கும்ங்க...

    ReplyDelete
  19. உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா
    என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
    அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
    நான் சொல்லாமல் தவிக்கின்றேன்......!

    நல்ல பாடல் ...

    ReplyDelete
  20. i think u r young, but now i realize that u r too young. ha ha ha

    ReplyDelete
  21. நல்ல பாடல் மாணவரே... எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஓன்று...

    ReplyDelete
  22. நல்ல பாடல் பாராட்டுகள் வாழ்த்துகள்
    தமிழன்புடன்
    போளூர் தயாநிதி
    http;//polurdhayanithi.blogspot.com

    ReplyDelete
  23. அறிமுகம் இல்லாத அழகிய மெலடி பாடல்...கேட்டேன் மாணவன்...உடனே கேட்ச் ஆகல..ஒரு வேளை இன்னும் சில வாட்டி கேட்டால் பிடிக்கும் நினைக்கிறேன்...ஆனால் லிரிக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete
  24. குழைந்தைகள் பலருக்கும் பிடித்த பாடல், இந்த பாடலின் டிரெயிலர் வெளிவந்ததாக ஞாபகம், படம் வெளிவரவில்லை, லிவிங்க்சன் நாயகன் என்று நினைக்கிறேன்!!! அருமையான பாடல். ஸ்ரீகாந்த் தேவாவால் ஏதோ பாடலில் இந்த பாடலின் மெட்டு காப்பி அடிக்கப்பட்டதாக ஞாபகம்.

    ReplyDelete
  25. பாடல் நன்றாக உள்ளது நண்பரே!

    ReplyDelete
  26. nice song.....

    HAPPY NEW YEAR!!! HAPPY PONGAL!!!

    ReplyDelete
  27. நல்ல பாடல் மாணவன். டைட்டிலைப் பார்த்த உடனேயே நெனச்சேன் இந்தப்பாடல்தான்னு.... !

    ReplyDelete
  28. அண்ணே கலக்கலான பாடலை தேர்வு செய்து போட்டிருக்கிங்க ....
    அருமையான பாடல்...
    அழகிய ரசனை அண்ணே .....

    ReplyDelete
  29. இந்த பாடலின் வரிகள் அனைத்தும் ... மிக இயல்பா இருக்கும் அண்ணே ..
    இசை அமைத்த விதமும் அருமை தான் ...
    தொடரட்டும் உங்கள் பயணம் ...

    ReplyDelete
  30. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி....

    ReplyDelete
  31. இந்த பாடல் என்னிடம் இருக்கிறது ஆனால் இதுவரை கேட்கவில்லை .
    இப்போதுதான் கேட்டேன் அருமையாக உள்ளது .
    நன்றி......................

    ReplyDelete
  32. சுகமான கீதம்..

    ReplyDelete
  33. பாடல் கேட்டு இருக்கிறேன் . இன்றுதான் படம் பற்றி தெரிந்து கொள்கிறேன் .

    ReplyDelete
  34. இந்த பாடல் எனக்கும் பிடிக்கும் நண்பா. கேசட்ல ரெக்கார்ட் பண்ணியிருந்தேன் தினசரி கேட்பேன்.
    இப்போதும் கூட.

    ReplyDelete
  35. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் மாணவன்... நன்றி

    ReplyDelete
  36. எனக்கும் பிடித்த பாடல் இது!

    ReplyDelete
  37. அருமையான பாட்டு. இப்படியெல்லாம் கூட போஸ்ட் போடுவீங்களா மாணவன் சார்..
    ***************************
    @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//
    அதுவும் உங்கள் தலைமையில் இருந்தால் கூடுதல் அசத்தல் பாஸ்!!

    ReplyDelete
  38. நல்ல பாடல்!!!
    முன்பு அடிக்கடி FMல் கேட்பேன்...

    ஸ்கூலில் பல செய்யுள் பகுதிகளுக்கு இந்த இசையை தான் மியூசிக் டச்சர் யூஸ் பண்ணி சொல்லி கொடுப்பாங்க... உடனே மனசுல நிக்கும்!!!!

    நல்ல ரசனை

    ReplyDelete
  39. good song. but someone copied the tune in a recent sundar c's movie. duplicate starts with 'innum oru kaalam...'. other two good songs in the movie are 'saamanthi poovuknum(unni krishnan) and 'sevvanthi poovukkum' (dont know the singer). Pls check the music director, i think it is composed by Sirpi.

    ReplyDelete
  40. நல்ல பாட்டு கேட்டு இருக்கிறேன்

    ReplyDelete
  41. நல்ல பாடல். அருமை.

    ReplyDelete
  42. /// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    vadai//

    ஆமாம் வடை உங்களுக்குதான்..

    ReplyDelete
  43. //@ பாரத்... பாரதி..
    @ஜெ.ஜெ.//

    நன்றிங்க...

    ReplyDelete
  44. // பாரத்... பாரதி... said...
    இசை தேவா அல்ல மாணவரே, எஸ்.ஏ. ராஜ்குமார்.

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    ithu music SA Rajkumar///

    எனக்கும் தெரியும் ஆனால் பாடலுக்கான இணைப்பு தளத்தில் தேடியபோது இசை தேவா என்று இருந்தது அதான் சற்று குழம்பிவிட்டேன்...

    நண்பர்கள் சிலர் பாடலுக்கு இசை சிற்பி என்று சொல்கிறார்கள்
    இன்னும் குழப்பமாகத்தான் உள்ளது
    இசை யாராக இருந்தாலும் நல்ல பாடலை கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    டிஸ்கி: என்ன நண்பர்களே பாடலை கேட்டு ரசித்தீர்களா//

    ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவ? இல்லைன்னு சொன்னா என்ன பண்ணுவ?//

    அய்யயோ தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுக்குங்க....ஹிஹி

    ReplyDelete
  46. //// பாரத்... பாரதி... said...
    //அல்லி பூ மலர்ந்தது
    ஏனென்று வெண்ணிலவே
    உனக்கென்ன தெரியாதா//

    //வலியா சுகமா தெரியவில்லை
    சிறகா சிறையா புரியவில்லை //
    ////எழுதும் கவிதையை எவர் கண்ணும்
    காணும் முன்பு கிழித்தது நினைவில்லையா //
    nice lines.//

    நன்றிங்க பாரதி

    ReplyDelete
  47. // karthikkumar said...
    nice song :)//

    நன்றி கார்த்திக்

    ReplyDelete
  48. /// கக்கு - மாணிக்கம் said...
    புதுப்பாடல்கள் எனக்கு அவ்வளவு தெரியாது ராசா.///

    அப்ப வயசாயிடுச்சுன்னு சொல்லுங்க...ஹிஹிஹி

    ReplyDelete
  49. /// Madhavan Srinivasagopalan said...
    இப்படிக் கூட பதிவு போடலாமா?
    பலே.. பலே..//

    ஹிஹிஹி

    ReplyDelete
  50. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    வலியா சுகமா தெரியவில்லை
    சிறகா சிறையா புரியவில்லை//
    ஆஹா காதல் உணர்வை அழகா சொன்ன பாட்டு//

    ஆமாண்ணே ஒவ்வொரு வரிகளும் காதல் உணர்வுகள்தான் பாடிய விதமும் அருமை

    ReplyDelete
  51. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    டைப் செய்து வெளியிட்டமைக்கு நன்றி///

    நன்றி அண்ணே

    ReplyDelete
  52. /// ஆர்.கே.சதீஷ்குமார் said...
    புதுப்பாடல்கள் எனக்கு அவ்வளவு தெரியாது ராசா//
    இவருக்கு 80 வயசு இருக்குமோ///

    இருக்கும் இருக்கும் ஹிஹிஹி

    ReplyDelete
  53. // பதிவுலகில் பாபு said...
    கேட்டிருக்கேங்க.. நல்ல பாடல்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  54. /// Speed Master said...
    இப்பத்தான் நினைத்தேன் எங்க பதிவை காணமே என்று///

    நீங்க நினைச்சமாதிரியே நடந்துடுச்சா....ஹிஹி

    ReplyDelete
  55. /// தங்கம்பழனி said...
    'செம்பருத்தி பூவே.. ' ன்னுதும் நெனெச்சேன்.. எனக்கும் ரொம்ப பிடிக்கும் அந்த பாடல்.. ஏன் எல்லாருக்கும் பிடிக்கும்..! அப்படியே இங்கேயும் வந்துட்டு போலாமே.. ////

    நன்றி நண்பரே தங்களது தளத்துக்கு வருகிறேன் நண்பரே

    ReplyDelete
  56. ///Blogger பிரியமுடன் ரமேஷ் said...

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.. அடிக்கடி கேட்பேன்.. நண்பர்கள்லாம்.. நல்லா ஓட்டுவாங்க.. எப்படித்தான் இப்படி யாருக்கும் தெரியாத பாட்டா விரும்பி கேக்கிறியோன்னு.. ஆனாலும் நான் விரும்பி கேட்பேன்.. சுமாரான இசைன்னாலும்.. அந்த வரிகளுக்காகவும்.. அதை அவரு பாடிருக்கற விதத்துக்காகவுமே எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்..///

    கண்டிப்பாக இந்த பாடல் அனைவருக்கும் பிடித்தபாடலாகத்தான் இருக்கும் நண்பரே

    ReplyDelete
  57. /// எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.. அடிக்கடி கேட்பேன்.. நண்பர்கள்லாம்.. நல்லா ஓட்டுவாங்க.. எப்படித்தான் இப்படி யாருக்கும் தெரியாத பாட்டா விரும்பி கேக்கிறியோன்னு.. ஆனாலும் நான் விரும்பி கேட்பேன்.. சுமாரான இசைன்னாலும்.. அந்த வரிகளுக்காகவும்.. அதை அவரு பாடிருக்கற விதத்துக்காகவுமே எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்..

    January 5, 2011 7:21 PM
    Delete
    Blogger வைகை said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    ithu music SA Rajkumar///////////////

    ஆமா கண்டுபிடுச்சிட்டாறு கவர்னரு!//

    போலீசுன்னுதான் சொன்னாங்க கவர்னரு ஆயிட்டாரா இருக்கும் இருக்கும் ஹிஹி

    ReplyDelete
  58. ///Blogger ம.தி.சுதா said...

    அருமை மாணவன் என்றுமே உயிர்ப்புடன் வாழும் இசையை உடைய பாடல்...//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  59. //Blogger பிரியமுடன் ரமேஷ் said...

    //புதுப்பாடல்கள் எனக்கு அவ்வளவு தெரியாது ராசா. ///

    புதுப்பாட்டு.. இந்த பாட்டு வெளி வந்து 10, 12 வருசத்துக்கு மேல இருக்கும்ங்க.//

    ஆமாம் நண்பரே பாடல் 1999 ல் வெளியான பாடல்

    ReplyDelete
  60. //Blogger dineshkumar said...

    உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா
    என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
    அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
    நான் சொல்லாமல் தவிக்கின்றேன்......!

    நல்ல பாடல் ...//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  61. //Blogger சி.பி.செந்தில்குமார் said...

    i think u r young, but now i realize that u r too young. ha ha ha//

    ஹிஹி நாங்கலெள்ளாம் யூத்துதான்...

    ReplyDelete
  62. //Blogger வெறும்பய said...

    நல்ல பாடல் மாணவரே... எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஓன்று...//

    நன்றி மரியாதைக்குரிய வெறும்பய அவர்களே, ஹிஹி

    ReplyDelete
  63. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    25//

    ஓகே ரைட்டு

    ReplyDelete
  64. ///Blogger polurdhayanithi said...

    நல்ல பாடல் பாராட்டுகள் வாழ்த்துகள்
    தமிழன்புடன்
    போளூர் தயாநிதி
    http;//polurdhayanithi.blogspot.com///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  65. //Blogger ஆனந்தி.. said...

    அறிமுகம் இல்லாத அழகிய மெலடி பாடல்...கேட்டேன் மாணவன்...உடனே கேட்ச் ஆகல..ஒரு வேளை இன்னும் சில வாட்டி கேட்டால் பிடிக்கும் நினைக்கிறேன்...ஆனால் லிரிக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு...///

    இன்னொருமுறை கேட்டுப்பாருங்க கண்டிப்பா பாடல் பிடிக்கும் சகோ

    ReplyDelete
  66. /// அறிமுகம் இல்லாத அழகிய மெலடி பாடல்...கேட்டேன் மாணவன்...உடனே கேட்ச் ஆகல..ஒரு வேளை இன்னும் சில வாட்டி கேட்டால் பிடிக்கும் நினைக்கிறேன்...ஆனால் லிரிக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு...

    January 5, 2011 9:11 PM
    Delete
    Blogger எப்பூடி.. said...

    குழைந்தைகள் பலருக்கும் பிடித்த பாடல், இந்த பாடலின் டிரெயிலர் வெளிவந்ததாக ஞாபகம், படம் வெளிவரவில்லை, லிவிங்க்சன் நாயகன் என்று நினைக்கிறேன்!!! அருமையான பாடல். ஸ்ரீகாந்த் தேவாவால் ஏதோ பாடலில் இந்த பாடலின் மெட்டு காப்பி அடிக்கப்பட்டதாக ஞாபகம்.//

    ஆமாம் நண்பரே தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  67. ///Blogger எஸ்.கே said...

    பாடல் நன்றாக உள்ளது நண்பரே!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  68. //Blogger Chitra said...

    nice song.....

    HAPPY NEW YEAR!!! HAPPY PONGAL!!!//

    நன்றி மேடம் உங்களுக்கும் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  69. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    நல்ல பாடல் மாணவன். டைட்டிலைப் பார்த்த உடனேயே நெனச்சேன் இந்தப்பாடல்தான்னு.... !///

    நன்றி அண்ணே

    ReplyDelete
  70. //Blogger அரசன் said...

    அண்ணே கலக்கலான பாடலை தேர்வு செய்து போட்டிருக்கிங்க ....
    அருமையான பாடல்...
    அழகிய ரசனை அண்ணே .//

    நன்றி அண்ணே அனைவருக்கும் பிடிக்கும் என்பதால்தான் தேர்வுசெய்தேன்

    ReplyDelete
  71. //Blogger அரசன் said...

    இந்த பாடலின் வரிகள் அனைத்தும் ... மிக இயல்பா இருக்கும் அண்ணே ..
    இசை அமைத்த விதமும் அருமை தான் ...
    தொடரட்டும் உங்கள் பயணம்//

    நிச்சயமாக உங்களின் ஆதரவோடு...

    ReplyDelete
  72. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி....//

    உங்களின் ஆசிர்வாதத்தோடு தொடரவேண்டியதுதான் பணியை....

    ReplyDelete
  73. //Blogger அஞ்சா சிங்கம் said...

    இந்த பாடல் என்னிடம் இருக்கிறது ஆனால் இதுவரை கேட்கவில்லை .
    இப்போதுதான் கேட்டேன் அருமையாக உள்ளது .
    நன்றி......................//

    என்னா பாஸ் இப்படி சொல்லீட்டீங்க சரி இப்பாவாவது கேட்டிங்களே அதுவே சந்தொஷம்தான்

    ReplyDelete
  74. //Blogger தமிழரசி said...

    சுகமான கீதம்.//

    சுகமான காதல் கீதம்ன்னு சொல்லுங்க ஹிஹி

    ReplyDelete
  75. // சுகமான கீதம்..

    January 5, 2011 11:32 PM
    Delete
    Blogger பலே பிரபு said...

    பாடல் கேட்டு இருக்கிறேன் . இன்றுதான் படம் பற்றி தெரிந்து கொள்கிறேன் .//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  76. //Blogger நாகராஜசோழன் MA said...

    இந்த பாடல் எனக்கும் பிடிக்கும் நண்பா. கேசட்ல ரெக்கார்ட் பண்ணியிருந்தேன் தினசரி கேட்பேன்.
    இப்போதும் கூட.//

    நானும் தினமும் ஒருமுறையாவது பாடலை கேட்டுவிடுவேன் நண்பரே நன்றி உங்கள் ரசனைக்கும்...

    ReplyDelete
  77. //Blogger தோழி பிரஷா said...

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் மாணவன்... நன்றி//

    நன்றிங்க தோழி

    ReplyDelete
  78. ///@ஜீ... said...

    எனக்கும் பிடித்த பாடல் இது!

    நன்றி நண்பரே

    @ஆயிஷா said...

    நல்ல பாடல் ..//

    நன்றிங்க

    ReplyDelete
  79. // தமிழ் உலகம் said...

    உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.//

    கண்டிப்பா இணைக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  80. //Blogger எம் அப்துல் காதர் said...

    அருமையான பாட்டு. இப்படியெல்லாம் கூட போஸ்ட் போடுவீங்களா மாணவன் சார்..
    ***************************
    @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//
    அதுவும் உங்கள் தலைமையில் இருந்தால் கூடுதல் அசத்தல் பாஸ்!!//

    ஏன் நல்லாயில்லையா நண்பரே ஹிஹிஹி

    ReplyDelete
  81. ///Blogger ஆமினா said...

    நல்ல பாடல்!!!
    முன்பு அடிக்கடி FMல் கேட்பேன்...

    ஸ்கூலில் பல செய்யுள் பகுதிகளுக்கு இந்த இசையை தான் மியூசிக் டச்சர் யூஸ் பண்ணி சொல்லி கொடுப்பாங்க... உடனே மனசுல நிக்கும்!!!!

    நல்ல ரசனை//

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  82. //Anonymous sathish kovai said...

    good song. but someone copied the tune in a recent sundar c's movie. duplicate starts with 'innum oru kaalam...'. other two good songs in the movie are 'saamanthi poovuknum(unni krishnan) and 'sevvanthi poovukkum' (dont know the singer). Pls check the music director, i think it is composed by Sirpi.//

    நீங்கள் சொன்ன பாடலும் என்னிடிடம் உள்ளது நண்பரே நேரம் கிடைக்கும்போது பதிவிடுகின்றேன்
    தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  83. //Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

    ம் ..//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  84. //@ இரவு வானம் said...

    நல்ல பாட்டு கேட்டு இருக்கிறேன்
    நன்றி நண்பரே

    @ சசிகுமார் said...

    அருமை//

    நன்றி சசி

    ReplyDelete
  85. //Blogger சுசி said...

    நல்ல பாடல்.//

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  86. //Blogger vanathy said...

    நல்ல பாடல். அருமை.//

    நன்றிங்க சகோ..

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.