Monday, February 28, 2011

மாணவன் ஸ்பெஷல் - (1) சிந்தனைக்கு...

வணக்கம் நண்பர்களே, ஒரு புதிய முயற்சியாக நான் படித்து கற்றுக்கொண்ட, நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பொன்மொழிகள்,தத்துவங்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டுகின்ற சின்ன சின்ன தகவல்களை “மாணவன் ஸ்பெஷல்” என்ற தலைப்பில் உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்..இதோ எனது முதல் முயற்சியாக:

Thursday, February 24, 2011

SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)

இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

Monday, February 21, 2011

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 

Thursday, February 17, 2011

ஆபிரகாம் லிங்கன் - வரலாற்று நாயகர்!

கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிகம் பலம் வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பாலோனோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களை குறிப்பிடுவர். ராணுவ பலமும், பொருளியல் வளமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படி ஓர் தகுதியை பெற்றுத் தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 43 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்கள் முத்திரையை பதித்திருந்தாலும் அவர்களுள் ஒரு சிலர்தான் உலகுக்கு தேவைப்பட்ட முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தனர். மனுகுலத்துக்கு மகிமையைத் தேடிதந்தனர் அவர்களுள் தலையாயவர் ஆபிரகாம் லிங்கன்.

Friday, February 11, 2011

தாமஸ் ஆல்வா எடிசன் - வரலாற்று நாயகர்! (பிறந்த நாள் வாழ்த்து சமர்ப்பனம்)

வணக்கம் நண்பர்களே, இன்று அறிவியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஆம் தன் வாழ்நாள் முழுவதும் ஆராய்ட்சிக்காகவும் கண்டுபிடிப்புக்காகவும் அர்ப்பனித்து சுமார் 1300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கண்டுபிடிப்புகளின் தந்தை என வரலாறு போற்றும் அறிவியல் உலகின் ஈடு இனையற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்த நாள். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பதிவு ஒரு சமர்ப்பனம்.

Tuesday, February 8, 2011

தத்துவஞானி அரிஸ்டாடில் - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே!!

வணக்கம் நண்பர்களே பதிவுலகம் சார்ந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வதோடு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டுகிறேன். ஆம் வலைச்சரத்தில் மதிப்பிற்குறிய திரு. சீனா ஐயா அவர்கள் நேற்று முதல் (7-2-2011)ஒரு வார காலத்திற்கு என்னை ஆசிரியராக பொறுப்பேற்று பல புதிய பதிவர்களை அறிமுகபடுத்த வாய்ப்பு வழங்கியுள்ளார். சீனா ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு என்னால் முடிந்தளவுக்கு வலைச்சரத்தில் சிறப்பாகவே செயல்படுகிறேன்...இதுவரை எனக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கி என்னை உற்சாகபடுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு வலைச்சரத்துக்கும் வருகை தந்து உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி!! நன்றி!!